close
Choose your channels

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான்

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் அரசியலுக்கு வந்தால் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அவரை நான் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியலை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், சமீபத்தில் தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்ற அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் கவுன்சிலர் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’நடிகர் விஜய் அரசியலுக்கு வர முயற்சிக்கிறார், அதை நான் வரவேற்கிறேன், ஆனால் அதே நேரத்தில் விஜய்யை நான் ஆதரிக்க வேண்டியது இல்லை, அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வந்து என்னோடு இணைந்தால் வலிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவாரா? சீமானை ஆதரிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos