close
Choose your channels

ஐஸ்வர்யா ராயுடன் செல்பி.. வர்ணித்து கவிதை எழுதிய 'பொன்னியின் செல்வன்' நடிகர்!

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்த பல கலைஞர்கள் இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வருகின்றனர் என்பதும் இந்த புரமோஷன் குறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவரை கவிதை வடிவில் தனது டுவிட்டர் பக்கத்தில் வர்ணித்துள்ளார். அவர் ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியிருப்பதாவது:

ஐஸ் வாரியம் !

கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்

அழகென நான் காண்பது…
பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்

வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்
தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.