close
Choose your channels

'எங்கு போய் தேடுவேன்? செல்வராகவனின் இன்றைய தத்துவம்..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனக்கு நண்பர்களே இல்லை என்றும் இனிமேல் நான் எங்கு சென்று நண்பர்களை தேடுவேன் என்றும் ஆதங்கமாய் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் செல்வராகவன் நடித்த ’பகாசூரன்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் ’புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது தத்துவ கருத்துக்களை தெரிவித்து வரும் செல்வராகவன் தனக்கு நண்பர்களே இல்லை என்றும் 23 வருடங்களாக தான் வேலையை மட்டுமே கவனத்துடன் செய்து வந்ததாகவும் இனிமேல் எங்கு போய் நண்பர்களை தேடுவேன் என்றும் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.