திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிகிறாரா 'செம்பருத்தி' ஷபானா?

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

‘செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷபானா என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் அவர் பார்வதி என்ற கேரக்டராகவே மாறியதையடுத்து அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஷபானா, ஆர்யன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் காதல் திருமணம் என்பது மட்டுமன்றி இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் சம்மதம் கிடைக்கவில்லை என்றும் அதனால் நண்பர்களின் உதவியால் திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் கசிந்துள்ளது. மேலும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஷபானா, ஆர்யன் ஆகிய இருவீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா, ஆர்யன் பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்து இரு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விமான விபத்து… பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துடன் பலியான சோகம்!

தென் அமெரிக்க நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு பிரபல இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல்

ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விடும் சஞ்சய்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் ராஜுவை கட்டிப்பிடித்துக்கொண்டு சஞ்சீவ் கண்ணீர் விடும் காட்சி இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் நெருப்பை வைத்து சர்க்கஸ் வித்தை காட்டிய கீர்த்தி பாண்டியன்!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்

பட வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் பாலகிருஷ்ணா

சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ… பிரஸ்மீட் வைத்து விளக்கிய விராட் கோலி!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரை ஒட்டி இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும்