close
Choose your channels

பட வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகர்!

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குநர் போயபாட்டி சீனுவுடன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகனான நடிகர் பாலகிருஷ்ணா நடித்த “அகண்டா“ திரைப்படம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இயக்குநர் போயபாட்டி சீனு இயக்கிய இந்தத் திரைப்படம் தற்போது தெலுங்கு ரசிகர்களிடைய மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் போயப்பாட்டி சீனுவுடன் நடிகர் பாலகிருஷ்ணா திருப்பதி தேவஸ்தானம் சென்றுள்ளார். நேற்று இரவே சென்ற அவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியதாகக்கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.