close
Choose your channels

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிகிறாரா 'செம்பருத்தி' ஷபானா?

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷபானா என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் அவர் பார்வதி என்ற கேரக்டராகவே மாறியதையடுத்து அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஷபானா, ஆர்யன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் காதல் திருமணம் என்பது மட்டுமன்றி இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் சம்மதம் கிடைக்கவில்லை என்றும் அதனால் நண்பர்களின் உதவியால் திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் கசிந்துள்ளது. மேலும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஷபானா, ஆர்யன் ஆகிய இருவீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா, ஆர்யன் பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்து இரு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.