ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… பகீர் சம்பவம்!!!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காசநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருக்கிறது. ஃபோர்டிஸ் எனும் மருத்துவமனையில் ஐசியூல் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சுயநினைவே இல்லாத போது இந்தக் கொடுமை நடைபெற்றதகாவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவே இல்லாமல் கடந்த 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சுயநினைவு திரும்பிய உடனே ஒரு கடிதத்தை தன்னுடைய அப்பாவிற்குக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கடிதத்தில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் விகாஸ் என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அவருடைய தந்தை ஒப்படைத்து இருக்கிறார்.
ஆனால் இந்நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே அந்தப் பெண் மீண்டும் சுயநினைவு இழந்து இருக்கிறார். இதனால் விசாரணையைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் காவல் துறையினருக்குத் தேவையான ஒத்துழைப்பை தர இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமானர் யார் என்பதைக் குறித்து அறிய முடியாமல் தற்போது போலீசாரும் தவித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் சுயநினைவை அடையும் வரை காத்திருக்க வேண்டி வரும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.