close
Choose your channels

ஷங்கர் - ராம்சரண் தேஜா படம் முதலமைச்சர் கதையா?

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் கதையை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இந்த படத்தின் கதை ஒரு மாநில முதலமைச்சரின் கதை என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் முதலமைச்சருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனிக்கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடிப்பது தான் கதை என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’முதல்வன்’ படமும் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட கதை என்பதும் தெரிந்ததே. தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கதையை எடுத்தாலும் திரைக்கதையில் அவர் வித்தியாசம் காட்டி இருப்பார் என்பது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெலுங்கில் இந்த படம் ஒரிஜினலாக உருவாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் தமிழ் வசனங்களை எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் அவர்கள் பாடலாசிரியர் விவேக் உடன் இணைந்து எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் அரசியல் வசனங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.