close
Choose your channels

HCL ஷிவ்நாடாரின் பாராட்டை பெற்ற 'தனி ஒருவன்'

Friday, October 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஊடகங்கள் மற்றும் திரையுலகினர்களின் பாராட்டை பெற்று மாபெரும் சூப்பர் ஹிட் படமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் வசூல் ரூ.75கோடியை தாண்டியுள்ளதாகவும், விரைவில் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தை பாராட்டாத திரையுலகினர்களே இல்லை என கூறலாம்.

இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் HCL நிறுவனத்தின் உரிமையாளருமான ஷிவ் நாடார் மற்றும் HCL உயரதிகாரிகளுக்கு சமீபத்தில் 'தனி ஒருவன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும், இந்த திரைப்படத்தை பார்த்து ஜெயம் ரவி, ஜெயம் ராஜா மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு, ஷிவ்நாடார் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.