close
Choose your channels

அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு கிடைத்த இனிப்பான செய்தி

Saturday, November 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களளயும் கவர்ந்துள்ளது. 'விண்ணை தாண்டி வருவாயோ' டீம் மீண்டும் இணைந்துள்ளதால் ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளது என்பது வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் கவுதம் மேனனுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது என்பதுதான் அந்த இனிமையான செய்தி. இந்த செய்தி ஒரு தயாரிப்பாளராக அவரை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்து சென்றிருக்கும்.
தமிழக அரசின் வரிவிலக்கு காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசிட்டிவ் ரிசல்ட், மற்றும் வரிவிலக்கு ஆகியவை இந்த படத்தின் லாபத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.