'மாநாடு' படத்திற்காக சிம்பு இதுவரை செய்யாத விஷயம்!

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்துபோது, தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சிம்பு செய்த பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தயாரிப்பாளருக்கு பல லட்சங்கள் நஷ்டம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு விட்டதாகவும் அவருக்கு பதிலாக வேறுநடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிப்பார் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதனை அடுத்து ’மகாநாடு’ என்ற படத்தை தான் நடித்து இயக்க இருப்பதாக சிம்பு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் சிம்புவின் தாயார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிம்பு மீண்டும் ’மாநாடு’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்திற்காக சிம்பு ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை சிம்பு நடித்த எந்த படத்திலும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இல்லை என்றும், ’மாநாடு’ படத்திற்காக முதன்முதலாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்திற்காக ஜனவரி 20 முதல் ஏப்ரல் 10 வரை தொடர்ச்சியாக சிம்பு கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இந்த 80 நாட்களில் சிம்பு இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

எனவே சிம்புவின் ’மாநாடு’ படம் ஜனவரி 20 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

More News

சிறுத்தை சிவா, அட்லி எல்லாம் என்ன பண்ணுவாங்க: சந்தானத்தின் 'டகால்டி' டீசர்

சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் 'டகால்டி'படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அட்டகாசமான தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு குடும்பம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கு: சத்யராஜ் 

கார்த்தி, ஜோதிகா நடித்த 'தம்பி'திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது

ரஜினியுடன் இரட்டை பலத்துடன் மோதும் சசிகுமார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை படக்குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர்

பிரபல இயக்குனரின் தாயார் மறைவு: சூர்யா இறுதி அஞ்சலி

சூர்யா நடித்த 'சிங்கம்' பட வரிசைகள் படங்கள் உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவரது தாயார் கனி அம்மாள் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81