close
Choose your channels

'மாநாடு' படத்திற்காக சிம்பு இதுவரை செய்யாத விஷயம்!

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்துபோது, தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சிம்பு செய்த பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தயாரிப்பாளருக்கு பல லட்சங்கள் நஷ்டம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு விட்டதாகவும் அவருக்கு பதிலாக வேறுநடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிப்பார் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதனை அடுத்து ’மகாநாடு’ என்ற படத்தை தான் நடித்து இயக்க இருப்பதாக சிம்பு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் சிம்புவின் தாயார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிம்பு மீண்டும் ’மாநாடு’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்திற்காக சிம்பு ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை சிம்பு நடித்த எந்த படத்திலும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இல்லை என்றும், ’மாநாடு’ படத்திற்காக முதன்முதலாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்திற்காக ஜனவரி 20 முதல் ஏப்ரல் 10 வரை தொடர்ச்சியாக சிம்பு கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இந்த 80 நாட்களில் சிம்பு இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

எனவே சிம்புவின் ’மாநாடு’ படம் ஜனவரி 20 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.