'மாநாடு' மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று நடைபெற்ற நிலையில்  மேடையிலேயே சிம்பு கண்ணீர் வடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பேசிய சிம்பு அவர்கள், ‘இந்த படத்தின் கதை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் அதில் நடித்த எங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு கஷ்டம் என்று கூறினார். மேலும் நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எஸ்ஏ சந்திரசேகரன், எஸ்ஜே சூர்யா, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த சிம்பு, ஒரு கட்டத்தில் திடீரென கண்ணீர் விட்டு அழுக தொடங்கிவிட்டார். தனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை கொடுத்ததாகவும் அதை எல்லாம் தாண்டி தான் இந்த படத்தில் நான் நடிப்பதாக கூறிய சிம்பு, கடைசியில் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று  விடை பெற்றார்.

’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையிலேயே சிம்பு கண்ணீர் விட்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

உன்னை பத்தி பேசறதுக்கு ஒண்ணும் இல்லை: இசைவாணியுடன் மீண்டும் மோதும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் இசைவாணி மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா: டைட்டில் அறிவிப்பு!

ஆர்யா நடித்த புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்… முதல் போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது

பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏய் வாயை மூடு, என்ன நக்கலா? தாமரை - இசைவாணி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், கண்ணாடி மற்றும் அதன் பிரதி பிம்பங்களாக நடித்து வருபவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்தோம்