close
Choose your channels

'மாநாடு' மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று நடைபெற்ற நிலையில்  மேடையிலேயே சிம்பு கண்ணீர் வடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’. இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பேசிய சிம்பு அவர்கள், ‘இந்த படத்தின் கதை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் அதில் நடித்த எங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு கஷ்டம் என்று கூறினார். மேலும் நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எஸ்ஏ சந்திரசேகரன், எஸ்ஜே சூர்யா, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த சிம்பு, ஒரு கட்டத்தில் திடீரென கண்ணீர் விட்டு அழுக தொடங்கிவிட்டார். தனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை கொடுத்ததாகவும் அதை எல்லாம் தாண்டி தான் இந்த படத்தில் நான் நடிப்பதாக கூறிய சிம்பு, கடைசியில் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று  விடை பெற்றார்.

’மாநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையிலேயே சிம்பு கண்ணீர் விட்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.