close
Choose your channels

'காலா'வை நேரடி ஒளிபரப்பு செய்த சிங்கப்பூர் நபர் கைது

Thursday, June 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காலாவை நேரடி ஒளிபரப்பு செய்த சிங்கப்பூர் நபர் கைது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் முதல்காட்சியில் ரசிகர்கள் படத்தை பார்த்து தெறிக்க விட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் ஒருவர் லைவ் செய்து பிடிபட்டுள்ளார்.

'காலா' திரைப்படம் சிங்கப்பூரில் பிரிமியர் காட்சிகள் நேற்றிரவு தொடங்கியது. அப்போது அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது மொபைல்போன் மூலம் ஸ்ட்ரீமிங் செய்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'காலா' படத்தை லைவ் செய்த நபரை பிடிக்க துரிதமாக செயல்பட்ட விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.