close
Choose your channels

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் முன்னேற்றமா? டுவிட்டரில் அப்டேட் தந்த குடும்பத்தினர்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் சென்று இருந்த போது அங்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் உள்பட ஏராளமான மொழிகளில் பல திரைப்பட பாடல்களை பாடிய பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் சென்றார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சுயநினைவு இழந்ததாகவும், லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளனர். அதில் மருத்துவர்கள் அளித்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளது. அவரது உடல் நலம் தற்போது நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. இந்திய அரசு பாம்பே ஜெயஸ்ரீ சிகிச்சைக்கு பக்கபலமாக இருந்து உதவி வருகிறது. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி’ என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment