close
Choose your channels

இந்த ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்கலாமே! பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு சின்மயி கேள்வி

Monday, August 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பங்கேற்பாளர்கள் தவறு செய்தால் டுவிட்டரிலும், நேரிலும் கேள்வி கேட்கும் பொதுமக்கள், இதே ஆர்வத்தோடு, தவறு செய்யும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்டிருந்தால் இந்நேரம் நாடு முன்னேறியிருக்கும் என்று பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறு செய்த காயத்ரியை நேற்று கமல்ஹாசன் முன் பார்வையாளர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். இதுகுறித்து சின்மயி கூறியபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்க்ளை அவமானப்படுத்த நினைக்கும் நம்ம மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்க வேண்டும் என்றும், நாட்டை அழிப்பவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளர்களை துரத்தி துரத்தி அவமான படுத்துவதில் என்ன லாபம்? என்று கேள்வி கூறியுள்ளார்.
சின்மயி பதிவு செய்த இந்த கருத்துக்கு பொதுமக்களிடம் இருந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.