close
Choose your channels

வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்.. போலீசார் பதிவு செய்த வழக்குப்பிரிவால் பரபரப்பு..!

Saturday, February 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமான நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் வேலைக்கார பெண் வழக்கம்போல் இன்று காலையில் வீட்டிற்கு வந்தபோது பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனை அடுத்து அவர் அக்கம்பக்கத்தாரிடம் கூறிய நிலையில், அவர்கள் வாணி ஜெயராமுக்கு போன் செய்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனை அடுத்து வாணி ஜெயராமின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் விரைந்து வந்து தன்னிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து வந்து வாணி ஜெயராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற ஐபிஓ 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் வாணி ஜெயராமன் மரணம் குறித்த அடுத்த கட்ட நான் விசாரணையை தொடங்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.