close
Choose your channels

'சிறகடிக்க ஆசை' சீரியலா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஒரே பாட்டும் கும்மாளமும் ஜாலி..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போல், சீரியலின் கேரக்டர் ஒவ்வொருவராக மாறி மாறி பாட்டு பாடும் காட்சிகள் உள்ளதை ஜாலியாக பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒரு திருமண விழாவிற்காக 500 மாலைகள் ஆர்டர் வாங்கி வந்த முத்து அதை தனது மனைவி மீனாவிடம் கூற, மீனா உடனே அவர் தனது சக மாலை கட்டும் நபர்களுடன் சேர்ந்து 500 மாலைகளை கட்ட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக மாலை கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சிலருக்கு அலுப்பு தட்ட உடனே ஸ்ருதி, பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்தால் சோர்வு தெரியாது என்று ஐடியா கொடுக்கிறார்.

இதனை அடுத்து ஒவ்வொருவராக பாட்டு பாடுகின்றனர். ’மல்லிகை என் மன்னன் மயங்க’ என்ற பாடலை என் மீனாவும், ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்ற பாடலை முத்துவும் பாடுகின்றனர். இதனை அடுத்த ’ஊதா ஊதா ஊதாப்பு’ என்ற பாடலை ரவி பாடிக் கொண்டே ஸ்ருதியுடன் நடனமாட அதை பார்த்து அனைவரும் ரசிக்கின்றனர்.

இதனை அடுத்து அண்ணாமலை ’பூ மாலையில் ஒரு மல்லிகை' என்று பாட்டை பாட, விஜயா ’மல்லிகைப்பூ வச்சு வச்சு’ என்ற பாட்டை பாடுகிறார். இன்றைய எபிசோடை பார்த்த பார்வையாளர்கள் இது ’சிறகடிக்க ஆசை சீரியலா? அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கஷ்டப்பட்டு கட்டிய 500 மாலையை சிட்டி திருடி விட்டதாகவும் அதனால் அதிர்ச்சி அடையும் முத்து அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் நாளைய எபிசோடு என்று இன்றைய எபிசோடின் இறுதியில் காண்பிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.