close
Choose your channels

நடிகர் சிவகார்த்திகேயன் இசை மேதைகளின் கொள்ளுப்பேரனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடைய தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாக்கள் பழம்பெரும் இசை மேதைகள் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றார். திருநள்ளாறு அருகே உள்ள திருவீழிமிழலை என்ற ஊர்தான் சிவகார்த்திகேயனின் சொந்த ஊராகும். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும் இதுகுறித்து புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்தியாவின் தலைசிறந்த நாதஸ்வரக் கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை மற்றும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத் தாத்தாக்கள் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இசை மேதைகளான கோவிந்தராஜ பிள்ளை மற்றும் தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயன் தாத்தாக்கள் ஆகும்

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் அவருடைய தாத்தாக்கள் மற்றும் கொள்ளுத் தாத்தாக்களின் விபரங்களை நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து அவர்களுடைய பெருமைகளை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.