close
Choose your channels

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டிய தமிழ் ஹீரோ: புகைப்படங்கள் வைரல்!

Saturday, April 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனது பூர்விக கிராமத்தில் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் பிறந்து வளர்ந்து படித்தது திருச்சி என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திருவிழிமிழலை என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் பிறந்து நாடு முழுவதும் புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை மற்றும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத் தாத்தாக்கள் என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பூர்விக கிராமத்துக்கு சென்ற சிவகார்த்திகேயன் தனது உறவினர்களை சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது தனது பூர்வீக கிராமமான திருவிழிமிழலையில் சிவகார்த்திகேயன் சொந்த வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’, ‘அயலான்’ மற்றும் தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகும் படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.