close
Choose your channels

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பிசிசிஐ தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் சௌரவ் கங்குலி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சௌரவ் கங்குலி உடல்நிலை குறித்த தகவலை விரைவில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து சவுரவ் கங்குலியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.