close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு லேசா கொரனோ தொற்று இருந்ததாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறிக்கையில் ‘எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிறப்பு மருத்துவ குழுவால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது உடல்நலம் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது நன்றியை தெரிவித்து கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனக்கு லேசான கொரோனா பாதிப்பு தான் உள்ளது என்றும் அதனால் யாரும் தனது உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.