close
Choose your channels

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

ஜீயர் தன்னுடைய உண்ணாவிரத்ததை கைவிட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நேரில் சென்று ஜீயரை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஒன்றரை நாளாக உண்ணாவிரதம் இருந்த ஜீயரின் உடல் நலிவுற்றதாலும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர்களின் வேண்டுகோளின்படியும் ராமானுஜ ஜீயர் தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய எஸ்.வி.சேகர், 'வருத்தம் தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாதவராக வைரமுத்து இருக்க முடியாது. அவர் மன்னிப்பு கேட்பதால் அவரது உயரம் என்ன குறைந்துவிடவா போகிறது? என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.