close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படம் எத்தனை பாகங்கள்? ஆச்சரிய தகவல்

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை எழுதி வரும் பிரபல வசனகர்த்தா மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்கள் சமீபத்தில் இந்த படம் பற்றி கூறிய தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏற்கனவே பாகுபலி பாகுபலி 2 என இரண்டு பாகங்கள் படத்தை இயக்கிய நிலையில் அவர் மகேஷ்பாபுவுடன் இணையும் படம் இரண்டு பாகங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்று தான் என்றும் ஆனால் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது நான்கு பாகங்கள் இந்த படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தின் கதை தயாராகி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலி, மகேஷ்பாபுவை வைத்து எத்தனை பாகங்கள் படங்களை இயக்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos