close
Choose your channels

1000 வருடங்களுக்கு முந்தைய ராணி கேரக்டரில் சன்னிலியோன்!

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

1000 வருடங்களுக்கு முந்தைய ராணி வாழ்ந்த கேரக்டரில் சன்னி லியோன் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சன்னிலியோன் ஏற்கனவே ’வீரமாதேவி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் யுவன் என்பவர் இயக்க உள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட திகில் படத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதை தற்போதைய காலம் மற்றும் 1000 வருடங்களுக்கு முந்தைய காலம் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறது என்றும் இதில் 1000 வருடத்துக்கு முந்திய காலத்தில் உள்ள ராணி கேரக்டரில் சன்னி லியோன் நடிக்க இருப்பதாகவும், அவர் வாழ்ந்த காலத்தில் தான் கிளியோபட்ரா வாழ்ந்ததாக கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சதீஷ் மற்றும் சஞ்சனா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் மேலும் ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. லோகேஷின் ‘மாநகரம்’ படத்திற்கு இசை அமைத்த ஜாவித் ரியாஸ் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் கதையை சன்னி லியோனிடம் கூறியவுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதாகவும் இதனை அடுத்து அவர் தமிழ் மொழியையும் கற்று வருவதாகவும் இயக்குனர் யுவன் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், வரலாற்று சம்பந்தமான காட்சிகள் மட்டும் மும்பையில் படமாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை தான் மூன்று வருடங்களுக்கு மேல் எழுதியதாகவும் இந்த படத்திற்கு ராணி வேடத்தில் சன்னி லியோன் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.