close
Choose your channels

'எங்கள் வீட்டுக்கு வந்த குட்டி மனிதன்'; சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நெகிழ்ச்சியான பதிவு..!

Friday, February 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எங்கள் வீட்டிற்கு வந்த குட்டி மனிதனை நாங்கள் வரவேற்று உள்ளோம் என்றும் தற்போது நாங்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்றும் சூப்பர் சிங்கர் பிரபலம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரண்டுக்குமே ரசிகர்கள் ஏராளமானார் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது திரையுலகிலும் பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா என்பது பலரும் அறிந்ததே.

அஜய் கிருஷ்ணா தனது ரசிகையான ஜெசி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் ஜெசி கர்ப்பமானார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை அஜய் கிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 12ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு ஒரு குட்டி மனிதன் வந்து விட்டார். நாங்கள் இப்போது பெற்றோர்கள் ஆகிவிட்டோம், எங்களுக்காக ஒரு சிறிய குடும்பத்தை உருவாக்கி தந்த அந்த குட்டி மனிதனுக்கு இன்னும் நிறைய செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.