close
Choose your channels

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி!

Friday, September 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ’மாநாடு’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கும் வேளையில் திடீரென சிம்புவை இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நீக்கினார். இதனை அடுத்து சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகரின் நடிப்பில் இந்த படம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய திரைப்படம் ’மிக மிக அவசரம்’ ரிலீஸுக்கு தயாராக இருந்தது. தற்போது ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் தங்களது பணியின்போது, வீட்டிலும் சமூகத்திலும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மிக உருக்கமாக இந்த படம் காண்பித்துள்ளதாகவும், இந்த படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா, ஹரிஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். இஷான் தேவ் இசையில், பாலபரணி ஒளிப்பதிவில் சுதர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வீ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.