close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்?

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விளையாட்டு வினையாவது போல் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது

இந்த டாஸ்க்கின்போது சனம் ஷெட்டியை கட்டையால் சுரேஷ் அடித்த விவகாரத்தை அடுத்து சுரேஷை சனம், ‘வாடா போடா’ என்று பேசியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கன்ஃபக்சன் ரூமுக்கு சுரேஷை அழைத்து பிக்பாஸ் விசாரணை செய்தும் அங்கு பிக்பாஸ் முன் சுரேஷ் கதறி அழுததுமான காட்சிகள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக சுரேஷ் கூறி வருவதாகவும் அதேபோல் சுரேசை வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இருவேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கடந்த சீசன்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சரவணனும், தற்கொலைக்கு முயன்ற மதுமிதாவும், மன உளைச்சல் காரணமாக ஓவியாவும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.