close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்திற்கு செட் ரெடி: படப்பிடிப்பு எப்போது?

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படத்திற்கான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த பணி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் வெற்றிமாறன் இன்னும் சூரி நடிக்கும் ’விடுதலை’ படத்தை முடிக்கவில்லை என்பதால் அதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை சிறுத்தை சிவா முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் பணியையும் முடிக்கும் தருவாயில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.