close
Choose your channels

தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு சூர்யா அறிவித்த சூப்பர் செய்தி!

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது திரைப் படம் ரிலீஸ் ஆகும்போது தெலுங்கு மாநிலங்களிலும் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சூர்யா நடித்து முடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தியாக சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து உள்ளார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இந்த தகவல் சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கான சூப்பர் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.