close
Choose your channels

'வலிமை' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவித்த தமிழக அரசு

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் குறிப்பாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள ‘வலிமை’ படக்குழுவினர்களுக்கும் தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டிருந்தன என்பதும் அவற்றில் ஒன்று திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதும் தெரிந்ததே

இந்த் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் ’வலிமை’ உள்பட பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 90% திரையரங்குகளில் ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.