close
Choose your channels

கொரோனா தடுப்பு நிதி: சூர்யா-கார்த்தி வழங்கிய மிகப்பெரிய தொகை!

Wednesday, May 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

இதனை அடுத்து பலர் தாராளமாக நிதி வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திரையுலகை பொறுத்தவரை எப்போதுமே முதல் நபராக பேரிடர் நிதி வழங்கும் வழக்கத்தை கொண்டுள்ள சிவகுமாரின் குடும்பம், நேற்று முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று நிதி வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபாய் ஒரு கோடி நிதியை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மேலும் பல திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.