close
Choose your channels

பிரபல தொழிலதிபரின் பயோபிக் திரைப்படம்.. சூர்யாவுடன் இணைய பிரபல நடிகர் திட்டம்..!

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ள பிரபல நடிகர் ஒருவர் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜன் பிள்ளை என்பதும் இவரது வாழ்க்கை பல திருப்பங்களை கொண்டது என்பது தெரிந்தது. பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மனான இவர் ‘பிஸ்கட் கிங்’ என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர் இவர் தான். இவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாரன் முயற்சி செய்து வருகிறார். இதற்காக திரைக்கதை அமைக்கும் திட்டம் தயாராகி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தை பிரித்விராஜ் சுகுமாரன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் 2டி நிறுவனத்துடன் இணைந்து அவர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா ஏற்கனவே தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் நடித்துள்ளதால் ராஜன் பிள்ளை கேரக்டரிலும் சூர்யா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.