close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்?

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்திலும் விரைவில் சூர்யா நடிக்க உள்ளார் என்பதும் இதன் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் சிறுத்தை சிவா மற்றும் அனிருத் ஆகிய இரண்டு பிரபலங்கள் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.