close
Choose your channels

லயோலாவில் என்னை சேர்த்து கொள்ள பிரின்சிபல் தயங்கினார்: சூர்யாவின் மலரும் நினைவுகள்

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் சந்தித்து பேசிய நிலையில் லயோலாவில் முன்னாள் மாணவர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவும் அதில் கலந்து கொண்டார். அதில் அவர் தனது கல்லூரி கால அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

லயோலாவில் தான் முதன்முதலாக சேர்வதற்காக தந்தை சிவக்குமார் உடன் சென்ற போது இதுவரை நட்சத்திரங்களின் வாரிசுகள் லயோலா கல்லூரியில் பலர் சேர்ந்து உள்ளனர். ஆனால் ஒருவர் கூட டிகிரி முடிக்க வில்லை. ஒரு சீட்டை எதற்காக வேஸ்ட் செய்ய வேண்டும் என்று பிரின்சிபல் கூறியதாகவும், ஆனால் தனது தந்தை கண்டிப்பாக எனது பையன் டிகிரி முடிப்பான் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும், அந்த வாக்குறுதியை தான் காப்பாற்றியதாகவும் கூறினார்

மேலும் லயோலா கல்லூரியில் படித்த போது பல விதமான அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதாகவும் லயோலா கல்லூரியில் இருந்து தான் திரையுலகில் பலரும் இயக்குனர்களும் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உருவாகி உள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்த முழு வீடியோவை தற்போது பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.