close
Choose your channels

9 வருடங்களுக்கு முன் இதே ஜனவரி 29ல்...சுசீந்திரனின் மலரும் நினைவுகள்

Monday, January 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு கடந்த 2009ஆம் ஆண்டு இதே ஜனவரி 29ல் தான் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூரி அடையாளம் காணப்பட்டார்

இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து இன்று அதாவது அதே ஜனவரி 29ல் இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அவதாரம் எடுக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதுகுறித்து சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ஜனவரி 29, 2009 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அன்றுதான் என் முதல் படம் ரிலீஸ் ஆனது. அதேபோல் அதே ஜனவரி 29 இன்று ஒரு நடிகனாக என்னுடைய முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. சுட்டுப்பிடிக்க உத்தரவு இயக்குனர் ராம்பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் மோகன் ஆகியோர்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை  கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.