close
Choose your channels

ஆரம்பிக்கலாம்ங்களா? சொந்த கிராமத்தில் புதுவீடு கட்டும் சீரியல் நடிகை.. பூமி பூஜை புகைப்படங்கள்..!

Saturday, February 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை ஒருவர் தனது சொந்த ஊரில் புதுவீடு கட்டுவதற்கான பூமி பூஜை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரைப்படம் மற்றும் தமிழ் சீரியல் நடிகை நீலிமா ராணி என்பதும் இவர் ’வாணி ராணி’ ’தென்றல்’ ’கோலங்கள்’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நீலிமா ராணிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கும் முன் இரண்டாவது ஆக ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பதும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது நீலிமா ராணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி தனது சொந்த ஊரான திண்டுக்கல் அருகே உள்ள ஒரத்தநாடு என்ற கிராமத்தில் புது வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை ஆரம்பிக்கலாம்ங்களா? என்ற ஹேஷ்டேக் உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீலிமா ராணி பதிவு செய்துள்ளார். இதனையடுத்து புது வீடு கட்டும் நீலிமா ராணிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.