close
Choose your channels

நடிகை டாப்ஸி நடிக்கும் மேலும் ஒரு தமிழ்ப்படம்: இயக்குனர் யார் தெரியுமா?

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2010ஆம் ஆண்டு ’ஆடுகளம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’வைராஜா வை’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தார். தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது ஒரு சில தமிழ் படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். குறிப்பாக ’ஜனகணமன’ மற்றும் தீபக் சுந்தரராஜன் இயக்கும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் டாப்ஸி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது டாப்ஸி நடிக்கும் மேலும் ஒரு தமிழ் படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அருள்நிதி நடிப்பில் உருவான K-13 என்ற படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் என்பவரின் இயக்கத்தில் டாப்ஸி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.