close
Choose your channels

'ஓம் ஃபினிஷாய நமஹா': தல தோனியை கொண்டாடும் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள்!

Friday, April 22, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதும் பல இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்கும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி கடைசி நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித் தந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் கொஞ்சமும் பதட்டப்படாமல் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது 2 ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி என 16 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்ததோடு, மீண்டும் தான் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர் என்று தல தோனி நிரூபித்துள்ளார். மேலும் போட்டி முடிந்ததும், எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாக இருந்தது அவரது மிகப்பெரிய மெச்சூரிட்டியை காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தல தோனியின் நேற்றைய அதிரடி ஆட்டத்தை சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து வீரேந்திர சேவாக் தனது சமூக வலைத்தளத்தில், ‘எம்எஸ் தோனி ’ஓம் ஃபினிஷாய நமஹா’, என்ன ஒரு வெற்றி’ என்று பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து பதிவு செய்த போது, ‘இந்த தொடரில் மிகவும் எதிர்பார்த்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த வெற்றி. தோனி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார் .

மேலும் நேற்றைய போட்டி முடிந்ததும் மைதானத்துக்கு உள்ளே வந்த கேப்டன் ஜடேஜா, தல தோனியின் முன் தலை வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.