ஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர், இந்தியாவுக்காக உலகக்கோப்பை உள்பட பல கோப்பைகளை பெற்று தந்தவர் உள்பட பல பெருமைகளுக்கு சொந்தக்கார் தல தோனி

37 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக விளையாடி வரும் தோனி தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரிலும் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தோனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் மூத்த வீரர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோனியின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ள நிலையில் தோனியின் ஓய்வு குறித்த செய்தியும் இன்றே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜோதிகாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் யூ சான்றிதழ் பெற்று நாளை மறுநாள் அதாவது ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எங்க செல்லத்த கோபப்பட வச்சது எவண்டா? பொங்கி எழுந்த லாஸ்லியா ஆர்மி

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களையும் சண்டைகளையும் பிரச்சனைகளையும் அமைதியாக கவனித்து கொண்டு அதே நேரத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் ஜாலியாக இருக்கும்

பாட்டில்கேப் சேலஞ்சில் தமிழ் ஆக்சன் நடிகர்

இணையத்தில் அவ்வப்போது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. அந்த வகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் உள்பட பல சேலஞ்ச்சுக்கள் வைரலாகியுள்ள நிலையில்

மாஸ் நடிகர்களுக்கு இணையாக சமந்தாவுக்கு கட்-அவுட்: கெத்து காட்டும் ரசிகர்கள்

அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக்கும்போது அவர்களது ரசிகர்கள் திரையரங்குகளில் விண்ணை முட்டும் கட் அவுட்டுக்களை வைத்து அசத்துவது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் நடந்த விசாரணை என்ன? 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் கொடுத்த ஆள் கடத்தல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீசார்