close
Choose your channels

எங்க செல்லத்த கோபப்பட வச்சது எவண்டா? பொங்கி எழுந்த லாஸ்லியா ஆர்மி

Wednesday, July 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களையும் சண்டைகளையும் பிரச்சனைகளையும் அமைதியாக கவனித்து கொண்டு அதே நேரத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் ஜாலியாக இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது லாஸ்லியாதான். அதே சமயம் யார் பக்கம் நியாயம், யார் பக்கம் தவறு என்பதையும் லாஸ்லியா கணித்து வைத்துள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட மீராவிடம் அவருடைய தவறை லாஸ்லியா சுட்டிக்காட்டினார். மீரா வழக்கம்போல் அதனை ஏற்று கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்

இந்த நிலையில் இன்று மீண்டும் வனிதா குருப்புக்கும் மதுமிதா குருப்புக்கும் சண்டை வந்துள்ளது. வழக்கம்போல் வனிதா குரூப்பில் உள்ள சாக்சி, ரேஷ்மா, அபிராமி போன்றோர் கத்தி பேச, அதற்கு ஓரளவுக்கு மதுமிதா குழுவினர் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் என்ன ஆனது என்றே தெரியவில்லை, திடீரென லாஸ்லியா கோபத்துடன் எழுந்து சென்றார். அப்போது 'சம்பந்தமே இல்லாம அவ ரியாக்ட் பண்ணிகிட்டு இருக்கா என்றும் இப்போது அவள் ஒரு பிரச்சனை இல்லை, அவள விட்ரு' என்றும் வனிதா கூறுகின்றார். லாஸ்லியா கோபப்படும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்

இந்த நிலையில் இந்த புரமோ வீடியோவை பார்த்துவிட்டு லாஸ்லியா ஆர்மியினர் பொங்கி எழுந்துள்ளனர்.

என் தலைவி லாஸ்லியாவையே கோபப்பட வெச்சுட்டிங்களேடா!
யார்ரா அது தலைவியவே டென்சன் ஆக்குறது.. தமிழ்நாடே கொந்தளிக்கும்
அடேய் தலைவியவே டென்சன் பண்ணி விட்டீங்கள மவனே வீடு இருக்காது டி
எங்க செல்லத்த கோபப்பட வச்சது எவண்டா?

என லாஸ்லியா ஆர்மியினர் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.