close
Choose your channels

கமல்ஹாசனை அடுத்து தளபதி விஜய் செய்த தரமான செயல்.. திரையுலக பிரபலங்கள் பாராட்டு..!

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யும் ஒரு கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த கட்டிடம் நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த கட்டடத்தை முழுமையாக முடிக்க 30 கோடி ரூபாய் தேவை என கூறப்பட்ட நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நடிகைகளிடம் தலா ஒரு கோடி ரூபாய் வாங்கி அதன் பிறகு வட்டி இல்லாமல் சில ஆண்டுகளுக்கு கழித்து திருப்பி கொடுக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனும் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யும் ஒரு கோடி ரூபாய் நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து விஜய்க்கு திரையுலகினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் நடிகைகள் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி நடிகர் சங்கத்தின் கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.