close
Choose your channels

அப்பா மீது இவ்வளவு பாசமா? விஜய் அளித்த உணர்வுபூர்வமான பதில்!

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்கள் என்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் கூட இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் விஜய் தனது அப்பா மீது எந்த அளவுக்கு பற்றும் பாசமும் வைத்துள்ளார் என்பது நேற்று ஒளிபரப்பான சன் டிவி பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் எடுத்த இந்தப் பேட்டியில் பல சுவராசியமான விஷயங்களை கூறிய விஜய் அவரது தந்தை குறித்து கூறிய போது மிகவும் உணர்வு பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: அப்பா என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேர் போன்றது என்றும் அப்பாவுக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் கடவுளை நம்மால் பார்க்க முடியாது, அப்பாவை நம்மால் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதிலில் இருந்து அவர் தனது அப்பா எஸ்ஏசி மீது எந்த அளவுக்கு பாசமும் பற்றும் வைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.