close
Choose your channels

கொள்ளையடித்த தங்கச் செயினை டிவி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த பாசக்கார திருடன்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

Saturday, September 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட மொழியில் ஒளிபரப்படும் ஒரு தனியார் டிவி நிறுவனத்திற்கு பார்சல் ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பார்சலில் திருடன் ஒருவன் தான் திருடிய தங்கச் செயினை பார்சல் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். காரணம் தான் கொள்ளையடித்த தங்கச் செயினை அவர் உரிமையாளரிடே திரும்ப ஒப்படைக்க விரும்பியிருக்கிறார். ஆனால் எப்படி அவரிடம் கொடுப்பது என்று குழம்பிபோன திருடன் நேரடியாக டிவி தனியார் நிறுவனத்திற்கு தங்கச் செயினை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்சல் அனுப்பிய திருடன் செயினை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், என்பதைத் தெரிந்துகொளள் முகவரியையையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன அந்நிறுவன ஊழியர்கள் பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரிக்குத் தொடர்பு கொண்டு செயின் உரிமையாளரை நிறுவனத்திற்கு வரவழைத்து இருக்கின்றனர். மேலும் செயினை பத்திரமாக அவரிடம் ஒப்படைக்கவும் செய்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் நெகிழ்ந்துபோன செயின் உரிமையாளர் அந்த டிவி நிறுவனத்திற்கும், திருடருக்கும் நன்றியை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வபோது நடக்கும் இதுபோன்ற சில சம்பவங்கள் மனிதாபிமானத்தையும் மற்றவர்களின் மனநிலை மீது அக்கறை காட்ட வேண்டிய தேவையும் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.