close
Choose your channels

ரஜினி கட்சியில் இணைய திட்டமா? திருநாவுக்கரசர் விளக்கம்

Wednesday, February 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க இன்று காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசரையும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் சந்தித்தார். ரஜினி விரைவில் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை ரஜினிகாந்த் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியது.

இந்த நிலையில் ரஜினியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசியபோது, 'ரஜினியுடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு உள்ளது, அவருடைய மகளின் திருமணம் நடைபெறவுள்ளதால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் அளிக்க எனது இல்லத்திற்கு வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்தித்ததால் அரசியல் சூழல்கள், நாட்டின் நிலவரம் போன்ற பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்தால் அரசியல் பேசாமலா இருப்போம். பேசத்தான் செய்தோம். ஆனால் குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். சினிமாவிலும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றபடி, அவர் கட்சி ஆரம்பிப்பாரா? எப்போது ஆரம்பிப்பார் ? என்பதெல்லாம் அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், என்னை அவர் தனது கட்சியில் சேருமாறு அழைக்கமாட்டார். ஏனென்றால் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் விசுவாசி. அவர் பிரதமர் ஆக வேண்டும் எனப் பாடுபடுவேன். எனவே காங்கிரஸில் தான் இருப்பேன்' என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.