தமிழக தேர்தல்: குடிசை வீட்டில் வாழும் எளிமையான வேட்பாளர் வெற்றி!

  • IndiaGlitz, [Sunday,May 02 2021]

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காலையில் இருந்தே திமுக கூட்டணி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் தங்கள் சொத்து மதிப்புகளை தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் விண்ணப்பத்தின்போது காட்டிய நிலையில் குடிசையில் எளிமையாக வாழும் ஒருவரும் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

குடிசை வீட்டில் வாழும் அவர் தேர்தல் செலவு வெறும் ரூபாய் 3000 ரூபாய் மட்டும்தான் செலவு செய்தார் என்பதும் அவரிடம் இருப்பது ஒரு பழைய டூவீலர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் ஒரு தமிழக அரசியல் கட்சியின் வேட்பாளரா? என அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர் தான் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 102 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்று உள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எய்ம்ஸ் செங்கலை தந்தையிடம் ஒப்படைத்த உதயநிதி!

திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை ஒப்படைத்த புகைப்படம் உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அஜித் பிறந்த நாள் புகைப்படம்: இணையத்தில் வைரல்

தல அஜித் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் நேற்று அதிகாலை முதலே திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் என்பதையும் பார்த்தோம் 

நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!

தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை: ரசிகர்கள் அதிர்ச்சி

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்

மறைந்த இயக்குனர் தாமிரா மகனுக்கு எழுதிய கடைசி கடிதம்: 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.