close
Choose your channels

தொலைபேசியில் மிரட்டல் வருகிறது: 'மெர்சல்' விவகாரம் குறித்து தமிழிசை

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'மெர்சல்' என்ற வெற்றி படத்தை சூப்பர் ஹிட் வெற்றி படமாக்க உதவிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி குறித்த தவறான புரிந்துணர்வை மட்டுமே தான் சுட்டிக்காட்டியதாகவும், யாரையும் எங்கள் கட்சிக்கு இழுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

ஒரு கருத்தை சொல்வதற்கு எப்படி சுதந்திரம் இருக்கின்றதோ அதேபோல் அந்த கருத்து தவறு என்று கூறுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. மெர்சலில் உள்ள தவறை சுட்டிக்காட்டியதால் எனக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி இணையதளங்களில் தவறான விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இது தவறான அணுகுமுறை' என்று தமிழிசை தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.