close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்தில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

’முறைமாமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ரஜினியின் ’அருணாச்சலம்’ கமல்ஹாசனின் ’அன்பே சிவம்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தர் சி. கடந்த ஆண்டு இவர் இயக்கிய ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சுந்தர் சி தற்போது இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

சுந்தர்சி - குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.