close
Choose your channels

30 வயது பெண்ணுடன் 14 வயது சிறுவன்: கொலையில் முடிந்த கள்ளக்காதல்

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

30 வயது பெண் ஒருவருடன் 14 வயது சிறுவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கள்ளக்காதல் கொலையில் முடிந்த சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷீலாதேவி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடிவந்துள்ளார். மூன்று குழந்தைகள் இருந்த ஷீலாவுக்கு திடீரென பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த ஷீலா தேவியின் கணவர், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கே சென்று விட்டார். அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. கணவர் சென்றவுடன் 14 வயது சிறுவனை அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து கள்ளக்காதலில் ஷீலாதேவி ஈடுபட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீரென நேற்று தனது வீட்டில் ஷீலாதேவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக வந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஷீலாதேவிக்கும் 14 வயது பீகார் சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது

இந்த நிலையில் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது நேற்று ஷீலாதேவி வீட்டிற்கு சென்று உறவுக்கு அழைத்ததாகவும் ஆனால் ஷீலாதேவி ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 30 வயது பெண் வயதுக்கு மீறி 16 வயது சிறுவனுடன் வைத்திருந்த கள்ளக்காதல் அவரை உயிரையே பறித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.